search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் தேங்காய் லாரிக்குள் மறைத்து கடத்திய 6500 கிலோ கஞ்சா சிக்கியது
    X

    சத்தீஸ்கரில் தேங்காய் லாரிக்குள் மறைத்து கடத்திய 6500 கிலோ கஞ்சா சிக்கியது

    சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தேங்காய் லாரிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 6500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #Chhattisgarh #CannabisCaptured
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூர். இங்கு முக்கிய சாலை வழியாக அதிக அளவிலான கஞ்சா கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, அந்த வழியாக வந்த தேங்காய் லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேங்காய்களுக்குள் மறைத்து மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கைப்பற்றபட்ட கஞ்சா சுமார் 6545 கிலோ எடை கொண்டதாகும். இதுதொடர்பாக கஞ்சாவை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த கஞ்சா கடத்தலில் தொடர்பு உடையவர்கள் குறித்து கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. #Chhattisgarh #CannabisCaptured
    Next Story
    ×