என் மலர்
செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் ஒரு போலீஸ்காரர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் போலீசார் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் பலியானார். #JammuKashmir #MilitantsAttack
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் போலீசார் வாகனம் ஒன்று ரோந்து சென்று கொண்டிருந்தது.
இதையடுத்து அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். அதன்பின் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்த போலீசாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் ஒரு போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #JammuKashmir #MilitantsAttack
Next Story






