search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர் ஷுஜாத் புகாரி
    X
    சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர் ஷுஜாத் புகாரி

    ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பத்திரிகை ஆசிரியரின் 2-வது பாதுகாவலரும் உயிரிழப்பு

    ஜம்மு காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சுட்டில் படுகாயமடைந்த ஆசிரியரின் 2-வது பாதுகாவலரும் உயிரிழந்தார். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை செயல்பட்டு வருகிறது. இதன் ஆசிரியராக இருந்தவர் ஷுஜாத் புகாரி.

    நேற்று மாலை ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் காரில் சென்றபோது, அவரை வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார், அவரது பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.

    இதையடுத்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவரது பாதுகாவலர்களில் ஒருவரும் இறந்தார்.



    இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பத்திரிகை ஆசிரியரின் இரண்டாவது பாதுகாவலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari
    Next Story
    ×