search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிராவில் லாரி மீது மினி பஸ் மோதி பயங்கர விபத்து - 10 பேர் பலி
    X

    மகாராஷ்டிராவில் லாரி மீது மினி பஸ் மோதி பயங்கர விபத்து - 10 பேர் பலி

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் லாரி மீது மினி பஸ் மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சந்த்வட் பகுதியில் இன்று அதிகாலை லாரி மீது மினி பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.

    லாரி டயர் பஞ்சர் ஆனதால் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பஸ்சானது மத்தியப்பிரதேசம் மாநிலம் தானே மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×