search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுமை செய்த மகனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பெற்றோர் - வீட்டை விட்டு வெளியேற கோர்ட் உத்தரவு
    X

    கொடுமை செய்த மகனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பெற்றோர் - வீட்டை விட்டு வெளியேற கோர்ட் உத்தரவு

    டெல்லியின் கொடுமைப்படுத்திய மகன் மருமகளுக்கு எதிராக பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில் மகன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியைச் சேர்ந்த 78 வயது முதியவர் தனது 74 வயது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். அவரது மகன், மருமகள் இருவரும் பெற்றொரை கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர்களை துன்புறுத்தி கொல்ல முயற்சி செய்தனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகன் மருமகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். மகன் மற்றும் மருமகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், அவர்களை அமைதியாக வாழ விட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.  #tamilnews

    Next Story
    ×