search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டான்
    X

    காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டான்

    ஜம்மு-காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். #militantkilled
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் எல்லைகோட்டுப் பகுதியில் இன்று இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இங்குள்ள வனப்பகுதி அருகே உஸ்த்தாத் கண்காணிப்பு கம்பம் வழியாக பாகிஸ்தானில் இருந்து ஒருவன் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்தனர்.

    அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத அந்த பயங்கரவாதி, பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி முன்னேறி வந்தான். பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதியை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவனிடம் இருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் 4 தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    மரங்கள் நிறைந்த அந்த வனப்பகுதியில் வேறு யாராவது பதுங்கி இருக்கிறார்களா? என தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #militantkilled
    Next Story
    ×