என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி கோவிலுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு - மத்திய அரசு முடிவு
Byமாலை மலர்3 Jun 2018 7:46 AM GMT (Updated: 3 Jun 2018 7:46 AM GMT)
நாள்தோறும் 1 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து திருப்பதி கோவிலுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. #Tirupati #GSTTAX
திருமலை:
திருப்பதி கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, அன்னதானம் ஆகியவற்றை வழங்கி வருகிறது. சேவை வரியில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு விலக்கு இருந்து.
இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட வில்லை. திருப்பதி தேவஸ்தானம் ஜி.எஸ்.டி.யில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்தது.
இந்த நிலையில் பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள பொற் கோவிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பக்தர்களுக்கு இலவசமாக ரொட்டி வழங்கப்படுகிறது. இதனை காரணம் காட்டி மத்திய அரசு ஜி.எஸ்.டி.யில் இருந்து பொற்கோவிலுக்கு வரிவிலக்கு அளித்துள்ளது.
இதனை மேற்கோள் காட்டி திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியிலும் நாள்தோறும் 1 லட்சம் பக்தர்களுக்கு மேல் அன்னதானம் வழங்குகின்றோம். இதனால் எங்களுக்கும் ஜி.எஸ்.டியில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த கோரிக்கையை ஏற்று திருப்பதிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அன்னதான திட்டத்திற்கு வாங்கப்படும் மூலப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.30 கோடி வரை வரிவிலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Tirupati #TirupatiTemple #GST #GSTTAX #Food
திருப்பதி கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, அன்னதானம் ஆகியவற்றை வழங்கி வருகிறது. சேவை வரியில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு விலக்கு இருந்து.
இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட வில்லை. திருப்பதி தேவஸ்தானம் ஜி.எஸ்.டி.யில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்தது.
இதனால் திருப்பதியில் தங்கும் விடுதி, திருமண மண்டபத்திற்குரிய கட்டணம் மற்றும் தங்க டாலர் விலை உயர்த்தப்பட்டது. மேலும் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் லட்டு, வடை விலையும் அதிகரித்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால், திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதனை மேற்கோள் காட்டி திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியிலும் நாள்தோறும் 1 லட்சம் பக்தர்களுக்கு மேல் அன்னதானம் வழங்குகின்றோம். இதனால் எங்களுக்கும் ஜி.எஸ்.டியில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த கோரிக்கையை ஏற்று திருப்பதிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அன்னதான திட்டத்திற்கு வாங்கப்படும் மூலப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.30 கோடி வரை வரிவிலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Tirupati #TirupatiTemple #GST #GSTTAX #Food
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X