என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாவூத் இப்ராகிமின் தம்பி மீண்டும் தானே சிறையில் அடைப்பு
    X

    தாவூத் இப்ராகிமின் தம்பி மீண்டும் தானே சிறையில் அடைப்பு

    மும்பை தாக்குதலுக்கு காரணமாக இருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி இக்பால் கஸ்கர் இன்று அதிகாலை மீண்டும் தானே சிறையில் அடைக்கப்பட்டான். #DawoodIbrahims #IqbalKaskar
    மும்பை:

    260 உயிர்களை பறித்த மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய தாவூத் இப்ராகிமின் தம்பி இக்பால் கஸ்கர். கடந்த 2003-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தாவூத் கஸ்கர், மும்பை ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டிய வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு தானே சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.


    இந்நிலையில், சிறையில் இருந்த இக்பால் கஸ்கர் நேற்றிரவு நெஞ்சு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து மும்பையில் உள்ள ஜே.ஜே. அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் இக்பால் கஸ்கர் மீண்டும் தானே சிறையில் அடைக்கப்பட்டான். #DawoodIbrahims #IqbalKaskar 
    Next Story
    ×