என் மலர்
செய்திகள்

4 வருடங்களில் 10 கோடி கேஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது - மோடி பெருமிதம்
60 வருடங்களாக காங்கிரஸ் ஆட்சியில் 13 கோடி கேஸ் சிலிண்டர் இணைப்புகளே வழங்கப்பட்ட நிலையில், கடந்த 4 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் சுமார் 10 கோடி கேஸ் இணைப்புகளை வழங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். #modi #pradhanmantriujjwalayojana
புதுடெல்லி:
பிரதமரின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக இன்று உரையாடினார். அப்போது பேசிய அவர், கேஸ் இணைப்பு வழங்குவது மிகவும் செலவுடையதாக இருப்பினும், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 4 கோடி இணைப்புகள் இலவச இணைப்புகள் என்றும் தெரிவித்தார். இது தலித்துகள், ஏழை பெண்களின் வாழ்வில் மிகவும் உதவியாக இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் வழங்குவதற்கான இலக்கை 5 கோடியாக நிர்ணயித்திருந்ததாகவும், இந்த ஆண்டு அந்த இலக்கு 8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 2019-ம் ஆண்டில் 80 சதவிகித மக்கள் கேஸ் சிலிண்டரை உபயோகிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உஜ்வாலா திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள இலவச இணைப்புகளில் 45 சதவிகித இணைப்புகள் தலித்துகளுக்கானது என மோடி கூறியுள்ளார். மேலும் இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு இணைப்புக்கும் எரிபொருள் விற்பனையாளர்களுக்கு ஆயிரத்து 600 ரூபாய் மானியம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடமும் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த உரையாடலின் போது பிரதமர் மோடி, கேஸ் உபயோகிப்பதன் அனுபவம் குறித்தும், சரியான நேரத்தில் கேஸ் வழங்கப்படுகிறதா? இடைத்தரகர்களின் தொந்தரவு இருக்கிறதா? போன்ற விவரங்களை கேட்டறிந்தார். #modi #pradhanmantriujjwalayojana
பிரதமரின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக இன்று உரையாடினார். அப்போது பேசிய அவர், கேஸ் இணைப்பு வழங்குவது மிகவும் செலவுடையதாக இருப்பினும், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 4 கோடி இணைப்புகள் இலவச இணைப்புகள் என்றும் தெரிவித்தார். இது தலித்துகள், ஏழை பெண்களின் வாழ்வில் மிகவும் உதவியாக இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் வழங்குவதற்கான இலக்கை 5 கோடியாக நிர்ணயித்திருந்ததாகவும், இந்த ஆண்டு அந்த இலக்கு 8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 2019-ம் ஆண்டில் 80 சதவிகித மக்கள் கேஸ் சிலிண்டரை உபயோகிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உஜ்வாலா திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள இலவச இணைப்புகளில் 45 சதவிகித இணைப்புகள் தலித்துகளுக்கானது என மோடி கூறியுள்ளார். மேலும் இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு இணைப்புக்கும் எரிபொருள் விற்பனையாளர்களுக்கு ஆயிரத்து 600 ரூபாய் மானியம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடமும் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த உரையாடலின் போது பிரதமர் மோடி, கேஸ் உபயோகிப்பதன் அனுபவம் குறித்தும், சரியான நேரத்தில் கேஸ் வழங்கப்படுகிறதா? இடைத்தரகர்களின் தொந்தரவு இருக்கிறதா? போன்ற விவரங்களை கேட்டறிந்தார். #modi #pradhanmantriujjwalayojana
Next Story






