search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் மகாராஷ்டிரா விவசாயிகள் - ஜுன் பத்தாம் தேதி பாரத் பந்த்
    X

    மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் மகாராஷ்டிரா விவசாயிகள் - ஜுன் பத்தாம் தேதி பாரத் பந்த்

    மகாராஷ்டிரா விவசாயிகள் ஜூன் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதிவரை தொடர் போராட்டக் களத்தில் இறங்குகின்றனர். ஜூன் 10-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். #bharatbandh
    மும்பை:

    விவசாய விளைபொருள் ஏற்றுமதி கொள்கையை நிர்ணயிக்க வேளாண்மைத்துறை ஆராய்ச்சியாளர்களை நியமிக்க வேண்டும். உற்பத்தி கொள்முதலுக்கான அதிகபட்ச ஆதரவு விலையை அறுவடைக்கு 2 மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும்.

    இயற்கை முறையில் மட்டும் வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதிவரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 130 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய கிசான் கிராந்தி ஜன் அந்தோலன் என்னும் அமைப்பு அறிவித்துள்ளது.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் பத்தாம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இந்த அமைப்பின் உறுப்பினர் குசும் சாவந்த் தெரிவித்துள்ளார். #MaharashtraFarmersstrike #bharatbandh
    Next Story
    ×