என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்ததை கண்டித்து பீகாரில் நாளை ராஷ்டிரிய ஜனதா தளம் தர்ணா போராட்டம்
Byமாலை மலர்17 May 2018 11:07 AM GMT (Updated: 17 May 2018 11:07 AM GMT)
கர்நாடகாவில் பா.ஜ.க. கட்சி ஆட்சி அமைத்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி நாளை தர்ணா போராட்டம் அறிவித்துள்ளது. #RJDdharna #BJPgovtinKarnataka
பாட்னா :
கர்நாடகாவில் பெரும்பான்மை பெறாத நிலையில் பா.ஜ.க. ஆட்சியமைத்ததை கண்டித்து லாலு பிரசாத் யாதவின் ராஷ்ரிய ஜனதா தளம் கட்சி நாளை தர்ணா போராட்டம் அறிவித்துள்ளது.
பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ரகுவன்ஷ் பிரசாத் சிங், ‘தனிப்பெரும்பான்மை இல்லாமல் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைத்தற்கு ராஷ்ரிய ஜனதா தளம் கட்சி கண்டனம் தெரிவிகின்றது.
மேலும், இதை எதிர்த்து பீகார் தலைநகர் பாட்னாவில் மிகப்பெரிய அளவில் தர்ணா போராட்டம் நடைபெறும். இதில், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மட்டுமல்லாமல் கட்சியின் அணைத்து முன்னணியினர் மற்றும் தொண்டர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் நாளை தர்ணா போராட்டம் நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை இடங்களை வைத்துள்ள காங்கிரஸ்- மஜத கூட்டணியை புறக்கணித்துவிட்டு, எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அனுமதித்ததன் மூலம் குதிரை பேரம் நடைபெற வழிவகுத்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். #RJDdharna #BJPgovtinKarnataka
கர்நாடகாவில் பெரும்பான்மை பெறாத நிலையில் பா.ஜ.க. ஆட்சியமைத்ததை கண்டித்து லாலு பிரசாத் யாதவின் ராஷ்ரிய ஜனதா தளம் கட்சி நாளை தர்ணா போராட்டம் அறிவித்துள்ளது.
பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ரகுவன்ஷ் பிரசாத் சிங், ‘தனிப்பெரும்பான்மை இல்லாமல் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைத்தற்கு ராஷ்ரிய ஜனதா தளம் கட்சி கண்டனம் தெரிவிகின்றது.
மேலும், இதை எதிர்த்து பீகார் தலைநகர் பாட்னாவில் மிகப்பெரிய அளவில் தர்ணா போராட்டம் நடைபெறும். இதில், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மட்டுமல்லாமல் கட்சியின் அணைத்து முன்னணியினர் மற்றும் தொண்டர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் நாளை தர்ணா போராட்டம் நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை இடங்களை வைத்துள்ள காங்கிரஸ்- மஜத கூட்டணியை புறக்கணித்துவிட்டு, எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அனுமதித்ததன் மூலம் குதிரை பேரம் நடைபெற வழிவகுத்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். #RJDdharna #BJPgovtinKarnataka
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X