search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமாநிலங்களை சூறையாடும் புழுதிப்புயல், மழை- உ.பியில் மட்டும் 51 பேர் பலி
    X

    வடமாநிலங்களை சூறையாடும் புழுதிப்புயல், மழை- உ.பியில் மட்டும் 51 பேர் பலி

    வடமாநிலங்களை சூறையாடி வரும் புழுதிப்புயல் மற்றும் மழை காரணமாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #DustStormUP
    லக்னோ:

    தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதன் காரணமாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல விமானங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

    அதேபோல், உ.பி, மேற்கு வங்கம், ஆந்திரா போன்ற பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், புழுதிப்புயலும் வீசி மக்களை நிலைகுலையச் செய்தன. இதில் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும், புழுதிப்புயல் மற்றும் மழையால்  51 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 83 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25 மாவட்டங்களில் 121 வீடுகள் சேதமடைந்துள்ளன.  #DustStormUP
    Next Story
    ×