search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுபதிநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு
    X

    பசுபதிநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு

    நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்தார். #Modi #PashupatinathTemple
    காத்மாண்டு:

    நேபாளம் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜனக்புரியில் உள்ள சீதை கோயிலில் வழிபாடு செய்தார். இன்று காலை மஸ்ட்டாங் மாவட்டத்தில் உள்ள முக்திநாத் ஆலயத்துக்கு சென்ற அவர் புத்த - இந்து மத சம்பிரதாயங்களின்படி முக்திநாதரை வணங்கினார்.



    பிற்பகல் பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்த மோடி, காத்மாண்டு நகரில் உள்ள பிரபல ஓட்டலில் இந்திய தூதர் மஞ்சீவி சிங் பூரி அளித்த விருந்தில் பங்கேற்றார்.

    நேபாளம் முன்னாள் பிரதமர் புஷ்பா கமால் தஹால் பிரச்சாந்தா-வை அவர் சந்தித்து பேசினார். காத்மாண்டு மாநகராட்சி சார்பில் இன்று மாலை அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் இன்றிரவு டெல்லி திரும்புகிறார். #Modi #PashupatinathTemple
    Next Story
    ×