search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரரை சுட்டுக்கொன்று தப்பிய பயங்கரவாதிகள்
    X

    காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரரை சுட்டுக்கொன்று தப்பிய பயங்கரவாதிகள்

    தெற்கு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். #KashmirAttack #KashmirJawanKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  அவ்வகையில் புல்வாமா மாவட்டம் தாக்கியா வாங்கம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கிடைத்து, மத்திய ரிசர்வ் படை போலீசார் இன்று காலையில் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

    பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை நோக்கி பாதுகாப்பு படையினர் முன்னேறியபோது, தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டே முன்னேறினர். இந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர் மன்ஜித் குமார் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இந்த பதற்றமான சூழ்நிலையை பயன்படுத்தி பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #KashmirAttack #KashmirJawanKilled
    Next Story
    ×