search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிரா - தண்ணீர் லாரியுடன் பயணிகள் ஆட்டோ மோதியதில் 9 பேர் பலி
    X

    மகாராஷ்டிரா - தண்ணீர் லாரியுடன் பயணிகள் ஆட்டோ மோதியதில் 9 பேர் பலி

    மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில் தண்ணீர் லாரியும், பயணிகள் ஆட்டோவும் மோதிய விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். #Accident
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் உள்ள கியோரய் தண்டா கிராமத்தில் பயணிகள் ஆட்டோ ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் 10க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    முன்னால் சென்ற வாகனத்தை ஆட்டோ முந்த முயன்றது. அப்போது கட்ட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, எதிரில் வந்த தண்ணீர் லாரி மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
    Next Story
    ×