என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் இதயத்தில் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடம் இல்லை- மோடி தாக்கு
Byமாலை மலர்10 May 2018 10:30 AM GMT (Updated: 10 May 2018 10:30 AM GMT)
காங்கிரஸ் கட்சியின் இதயத்தில் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடம் இல்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.#karnatakaelection2018 #Modi
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. பா.ஜ.க. சார்பில் இன்று 23 தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக பா.ஜ.க.வின் எஸ்.டி., எஸ்டி, ஓ.பி.சி. மற்றும் ஸ்லம் மோர்ச்சா தொண்டர்களிடையே நமோ ஆப் வாயிலாக மோடி உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியை அவர் தாறுமாறாக விமர்சித்தார்.
பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற பா.ஜ.க. முயற்சி செய்கிறது. சமூக நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்ய பா.ஜ.க. அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது’ என மோடி பேசினார். #karnatakaelection2018 #Modi
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. பா.ஜ.க. சார்பில் இன்று 23 தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக பா.ஜ.க.வின் எஸ்.டி., எஸ்டி, ஓ.பி.சி. மற்றும் ஸ்லம் மோர்ச்சா தொண்டர்களிடையே நமோ ஆப் வாயிலாக மோடி உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியை அவர் தாறுமாறாக விமர்சித்தார்.
‘1952ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதும், 1953ல் பந்தாரா மக்களவை தொகுதி இடைத் தேர்தலின்போதும் அம்பேத்கரை தோற்கடிக்க காங்கிரஸ் தனது அனைத்து சக்திகளையும் பயன்படுத்தியது.
அதனால்தான், அம்பேத்கர் தோல்வி அடைந்து அவமானத்தை சந்தித்தார். அம்பேத்கருக்கு மரியாதை செய்யும் வகையில் ஒரு காரியத்தையாவது காங்கிரஸ் செய்தது உண்டா என்பதை தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் இதயத்தில் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடம் இடம் இல்லை. இது பல தசாப்தங்களாக நடந்தது. காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்த வரை, அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.
பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற பா.ஜ.க. முயற்சி செய்கிறது. சமூக நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்ய பா.ஜ.க. அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது’ என மோடி பேசினார். #karnatakaelection2018 #Modi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X