search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில் அருகே குடியிருப்பு பகுதியில் நடமாடிய சிறுத்தையை படத்தில் காணலாம்.
    X
    திருப்பதி கோவில் அருகே குடியிருப்பு பகுதியில் நடமாடிய சிறுத்தையை படத்தில் காணலாம்.

    திருப்பதி கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம்

    திருப்பதி கோவில் அருகே தொடர்ந்து சிறுத்தைகள் நடமாட்டம் பெருகுவதால் திருமலைவாசிகளும் பக்தர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
    திருமலை:

    திருப்பதி கோவில் அருகே கடந்த சில தினங்களாக வனப்பகுதியின் அருகாமையில் உள்ள பாலாஜி காலனி, காட்டேஜ் இடங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பாலாஜி காலனி கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை புகுந்து அந்த வீட்டில் உள்ள நாயை கொன்று தூக்கி கொண்டு சென்றது.

    நேற்று இரவு சிறுத்தை மறுபடியும் அதே இடத்திற்கு வந்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்தது. செடிகளின் அசைவு கேட்டு மாடிக்கு சென்று அங்கு திரிந்து கொண்டிருந்த சிறுத்தையை பொதுமக்கள் கண்டனர். அதை கேமராவில் படம் பிடித்தனர்.

    பொதுமக்கள் வரும் சத்தம் கேட்டு சிறுத்தை காட்டிற்குள் சென்றுவிட்டது. தொடர்ந்து சிறுத்தைகள் நடமாட்டம் பெருகுவதால் திருமலைவாசிகளும் பக்தர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.  #tamilnews



    Next Story
    ×