search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு- காஷ்மீரில் போதை பொருள் கடத்திய 4 பேர் பிடிபட்டனர்
    X

    ஜம்மு- காஷ்மீரில் போதை பொருள் கடத்திய 4 பேர் பிடிபட்டனர்

    பஞ்சாப்பில் இருந்து காஷ்மீருக்கு போதை பொருள் மற்றும் சாராயம் கடத்திய 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    ஜம்மு:

    பஞ்சாபில் இருந்து காஷ்மீருக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜம்முவில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது சட்வாரி பகுதியில் உள்ள அசோக் நகரில் வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் 15 கிலோ எடை கொண்ட போதை பொருள்களை கைப்பற்றினர்.

    இதேபோல், நர்வால் பகுதியில் நடத்திய சோதனையில் 122 பாக்கெட் சாராயத்தை கடத்திய 3 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் பஞ்சாபில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×