என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
சர்க்கரை மீதான இறக்குமதி வரி 10 சதவீதம் அதிகரிப்பு
By
மாலை மலர்10 July 2017 11:24 PM GMT (Updated: 10 July 2017 11:24 PM GMT)

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சர்க்கரை மீதான வரியை 10 சதவீதம் உயர்த்த அண்மையில் உணவுத்துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
புதுடெல்லி:
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டில் சர்க்கரை விலை வெகுவாக குறைந்து கரும்பு விவசாயிகளும், சர்க்கரை ஆலைகளும் பாதிக்கப்படும் நிலைமை உருவானது.
இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சர்க்கரை மீதான வரியை 10 சதவீதம் உயர்த்த அண்மையில் உணவுத்துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இதை ஏற்றுக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் 40 சதவீத வரியை 50 சதவீதமாக அதிகரித்து மத்திய வருவாய்த்துறை நேற்று உத்தரவு பிறப்பித்தது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த உத்தரவு எந்த நாளில் முடியும் என்பது பற்றி கூறப்படவில்லை.
உள்நாட்டில் சர்க்கரை விலையை சீராக பராமரிக்கும் விதமாகவும், வெளிநாடுகளில் இருந்து தரமற்ற சர்க்கரை இறக்குமதி செய்வதை தடுக்கும் வகையிலும் இந்த வரி உயர்வு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டில் சர்க்கரை விலை வெகுவாக குறைந்து கரும்பு விவசாயிகளும், சர்க்கரை ஆலைகளும் பாதிக்கப்படும் நிலைமை உருவானது.
இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சர்க்கரை மீதான வரியை 10 சதவீதம் உயர்த்த அண்மையில் உணவுத்துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இதை ஏற்றுக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் 40 சதவீத வரியை 50 சதவீதமாக அதிகரித்து மத்திய வருவாய்த்துறை நேற்று உத்தரவு பிறப்பித்தது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த உத்தரவு எந்த நாளில் முடியும் என்பது பற்றி கூறப்படவில்லை.
உள்நாட்டில் சர்க்கரை விலையை சீராக பராமரிக்கும் விதமாகவும், வெளிநாடுகளில் இருந்து தரமற்ற சர்க்கரை இறக்குமதி செய்வதை தடுக்கும் வகையிலும் இந்த வரி உயர்வு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
