என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேஸ்ட்ரோ கார்டுகளுக்கு தடை - புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ள அறிவிப்பு
Byமாலை மலர்3 July 2017 12:14 AM GMT (Updated: 3 July 2017 12:14 AM GMT)
வருகிற 31-ந்தேதி முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ‘மேஸ்ட்ரோ’ கார்டுகளுக்கு தடை விதித்து உள்ளதாகவும் புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கிரெடிட், டெபிட் கார்டுகளை பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ‘இ.எம்.வி. சிப்’-ஐ மையமாக கொண்ட கார்டுகளாக வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. எனவே இதன் அடிப்படையிலேயே வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கார்டுகள் வழங்கி வருகின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது 5.65 கோடி கிரெடிட், டெபிட் கார்டுதாரர்களை கொண்டுள்ளது. இதில் சுமார் 1 லட்சம் வாடிக்கையாளர்கள் பழைய மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகளை (ஏ.டி.எம். கார்டு) வைத்துள்ளனர். இந்த கார்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ளதால் அவற்றுக்கு தடை விதிக்க வங்கி முடிவு செய்துள்ளது.
எனவே மேஸ்ட்ரோ கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் எந்த கிளையிலும் அவற்றை கொடுத்து புதிய ‘இ.எம்.வி. சிப்’-ஐ அடிப்படையாக கொண்ட கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. புதிய கார்டுகளை வருகிற 30-ந்தேதிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ள வங்கி, 31-ந்தேதி முதல் மேஸ்ட்ரோ கார்டுகள் செல்லாது எனவும் அறிவித்து உள்ளது.
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கிரெடிட், டெபிட் கார்டுகளை பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ‘இ.எம்.வி. சிப்’-ஐ மையமாக கொண்ட கார்டுகளாக வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. எனவே இதன் அடிப்படையிலேயே வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கார்டுகள் வழங்கி வருகின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது 5.65 கோடி கிரெடிட், டெபிட் கார்டுதாரர்களை கொண்டுள்ளது. இதில் சுமார் 1 லட்சம் வாடிக்கையாளர்கள் பழைய மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகளை (ஏ.டி.எம். கார்டு) வைத்துள்ளனர். இந்த கார்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ளதால் அவற்றுக்கு தடை விதிக்க வங்கி முடிவு செய்துள்ளது.
எனவே மேஸ்ட்ரோ கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் எந்த கிளையிலும் அவற்றை கொடுத்து புதிய ‘இ.எம்.வி. சிப்’-ஐ அடிப்படையாக கொண்ட கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. புதிய கார்டுகளை வருகிற 30-ந்தேதிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ள வங்கி, 31-ந்தேதி முதல் மேஸ்ட்ரோ கார்டுகள் செல்லாது எனவும் அறிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X