என் மலர்

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் திருப்பதி லட்டுக்கு வரி விலக்கு
    X

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் திருப்பதி லட்டுக்கு வரி விலக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாநில அரசின் நேரடி மானிய திட்டத்தின் மூலம் திருப்பதி லட்டுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    திருப்பதி:

    சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பு திட்டம் ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு முன்னர் சேவை வரியிலிருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை.

    திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, நாள் முழுவதும் அன்னதானம், சிற்றுண்டி, பால், காபி, டீ, மோர் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால், இவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆந்திர அரசு வைத்த கோரிக்கையை, ஜி.எஸ்.டி. கவுன்சில் நிராகரித்தது. ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் கிடைக்கும் கோவில்களுக்கே வரி விதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், ஆண்டுதோறும் ரூ.1,100 கோடி வரை வருவாய் ஈட்டும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு எப்படி வரி விலக்கு அளிக்க முடியும். மாநில அரசு நேரடி மானிய திட்டம் மூலம், தேவஸ்தானம் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யலாம். அல்லது குறைக்கலாம் என கவுன்சில் அறிவுறுத்தியது.

    இந்த நிலையில், மாநில அரசின் நேரடி மானிய திட்டத்தின் மூலம் திருப்பதி லட்டுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு லட்டு பிரசாதம் தயாரிக்க, ரூ.35 செலவாகிறது.

    இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு மானிய விலையில் ரூ.20-க்கு 2 லட்டும், திவ்ய தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டும் வழங்கப்படுகிறது. இதனால் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆண்டுதோறும் ரூ.250 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பால், திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுக்கு ரூ.75 கோடியே 50 லட்சம் வரி செலுத்தப்படும் நிலை உள்ளது. லட்டுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது தொடர்பாக, ஆந்திர மாநில நிதித்துறை மந்திரி யனமால ராமகிருஷ்ணடு விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.

    அதேபோல் திருப்பதியில் தங்கும் விடுதிகள் மற்றும் தலைமுடி காணிக்கை, உண்டியல் வருமானம் மீதான வரி சுமையும் குறைக்கப்படும் அல்லது விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    1000 ரூபாய் வாடகை கட்டணம் கொண்ட தங்கும் அறைகளுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

    Next Story
    ×