search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    புற்றுநோய்க்கு புதிய மருந்து
    X

    புற்றுநோய்க்கு புதிய மருந்து

    • புற்றுநோய்கள் மார்பு, எலும்பு, குடல் போன்று பலவிதங்களில் வரலாம்.
    • ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வைத்திய முறைகள் உண்டு.

    கீமோதெரபி இல்லை. ரேடியேசன் இல்லை. சத்திர சிகிச்சை இல்லை. எதுவும் இல்லை. சாதாரணமான ஒரு மருந்து கொடுக்கப்பட்டு புற்று நோயாளிகள் குணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். வெவ்வேறு விதப் புற்றுநோய்களையுடைய 14 பேருக்குச் செய்த ஆராய்ச்சியின் முடிவு, மருத்துவ உலகையே துள்ளிக் குதிக்க வைத்திருக்கிறது.

    மருத்துவ வரலாற்றிலேயே புற்றுநோய் நூறு சதவீதம் முழுமையாக முதன்முறையாக நீக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய்கள் மார்பு, எலும்பு, குடல் போன்று பலவிதங்களில் வரலாம். ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வைத்திய முறைகள் உண்டு. ஆனால், இந்த மருந்து அனைத்துவிதப் புற்று நோய்களையும் இல்லாமல் செய்திருக்கிறது என்பது நம்ப முடியாத அதிசயம்.

    'Dostarlimab' என்னும் மருந்து 500 மில்லிகிராம் அளவில் மூன்று வார இடைவெளியில் ஆறு மாதங்களுக்கு நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட அனைவருக்கும் புற்றுநோய்க் கலங்கள் முழுமையாக இல்லாமல் அழிக்கப்பட்டன. வேறு எந்தவித வைத்தியமும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. நிஜமாகவே மகிழ்ச்சியடைய வேண்டிய அற்புதமான நிகழ்வு இது. 'அறிவியல் நின்று வெல்லும்'

    -ராஜ்சிவா

    Next Story
    ×