என் மலர்
கதம்பம்

பாட்டு பாடினால் பால் கொடுக்கும்...
- டென்ஷனான விவசாயிகள், மனுசனுக்கு எந்த பாட்டு பிடிக்கும் என்பதை கண்டுபிடிப்பதே கஸ்டமா இருக்கு.
- மாட்டுக்கு என்ன பாட்டு பிடிக்கும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது என சொல்லி பாட்டுபோடுவதை நிறுத்திவிட்டார்கள்.
பாட்டு பாடினால் மாடுகள் பால் கறக்கும் என்பது வில்லேஜ் விஞ்ஞானம். அது உண்மை என விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
இங்கிலாந்தின் லெய்சிஎஸ்டர் பல்கலைகழகத்தில் பாட்டுபோட்டு மாடுகளிடம் பால் கறந்து ஒரு பெரிய சோதனை நடத்தப்பட்டது. அப்போது நிமிடத்துக்கு நூறு பீட்களுக்கு (100 beats per minute- BPM) குறைவாக இருக்கும் பாடல்களை ஒலிக்கவிட்டால் மாடுகள் 3% கூடுதலாக பால் கறக்கும் என கண்டுபிடித்தார்கள்.
சாம்பிளுக்கு சொல்லவேண்டுமெனில் ஜீன்ஸ் படத்தில் வரும் "பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்" பாடல் 104 பீட்ஸ். அதைவிட குறைவான பீட்ஸ் வரும் பாடலை தான் மாடுகள் விரும்பி கேட்கும்.
அப்புறம் என்ன? மாட்டுப்பண்ணைகளில் மெல்லிசை பாடல்களை ஒலிக்கவிட்டு பால்வளத்தை பெருக்கலாமே?
அதில் ஒரு சிக்கல் இருக்கு. மாடுகளும் பாடல்கள் விசயத்தில் மனிதர்கள் மாதிரிதானாம். சில பாடல்கள் அவற்றுக்கு பிடிக்காதாம். அவற்றை போட்டால் பால்வரத்து குறைந்துவிடுகிறது.
ஒரு பெரிய ஆட்டுப்பண்ணையில் "ஆல்வின் அன்ட் சிப்மன்க்ஸ்" பாடலை போட்டவுடன் 2000 ஆடுகள் ஒட்டுமொத்தமாக பால் கொடுப்பதை நிறுத்திவிட்டன.
டென்ஷனான விவசாயிகள், மனுசனுக்கு எந்த பாட்டு பிடிக்கும் என்பதை கண்டுபிடிப்பதே கஸ்டமா இருக்கு, இதில் மாட்டுக்கு என்ன பாட்டு பிடிக்கும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது என சொல்லி பாட்டுபோடுவதை நிறுத்திவிட்டார்கள்.
"செண்பகமே, செண்பகமே" பாடலின் பீட்ஸ் (BPM) எத்தனை தெரியுமா? 94
அதாவது மாடுகளுக்கு பிடித்த பாடல் அது.
- நியாண்டர் செல்வன்






