என் மலர்
கதம்பம்

சமயோசித புத்தி
- தெனாலி ராமன் வீட்டில் என்ன பிரச்சனை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..
- சமயோசித புத்தி சம்சாரத்திடம் செல்லாது.
தெனாலி ராமன் இரவில் படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...
திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது...
மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..
சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்..
புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..
"என்னது.. எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா..'' -கத்துகிறாள் மனைவி.
"எதிர்த்தா பேசுகிறாய்..'' என்று அவள் மேல் துப்புகிறான்..
"கேட்பதுற்கு ஆளில்லையா..'' என்று அலற துவங்குகிறாள் மனைவி..
தெனாலி ராமன் வீட்டில் என்ன பிரச்சனை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..
"என்ன தெனாலிராமா இது.." என்று கேட்கிறார்கள்..
"பாருங்கள்.. எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்புகிறேன்.. ஒன்றுமே சொல்லவில்லை.. ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள்.." என்கிறான் தெனாலிராமன்.
திருடன் பிடிபடுகிறான்..
சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை..
திருடன் பிடிபட்டது இருக்கட்டும்..
அவர்கள் போனதுக்கு அப்புறம் தெனாலிராமன் அலறத் துவங்குகிறான்..
யாரும் கண்டுக்கல...
எனவே சமயோசித புத்தி சம்சாரத்திடம் செல்லாது.
-ஜோசப் அந்தோனிராஜ்






