என் மலர்
உண்மை எது

வாகன விபத்தில் 2 பேர் படுகாயம்
- வாகன விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்
- கார் மீது லாரி மோதி விபத்து
கரூர்:
கரூர் மாவட்டம், மாயனுாரை அடுத்த, கீழ முனையனுாரை சேர்ந்தவர் நம்பிராஜ் (வயது 30). இவர், ஆம்னி காரில் தனது ஊரை சேர்ந்த இளஞ்சியம் (45), கார்த்திக் ஆகியோருடன், திருச்சி நோக்கி கடந்த சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த வீரராக்கியம் தனியார் பால் கம்பெனி லாரி, இவர்கள் மீது மோதியது. இதில் இளஞ்சியம், கார்த்திக் இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உதவியுடன், குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து நம்பிராஜ் கொடுத்த புகாரின் படி, லாரி டிரைவரான, புலியூர், குளத்துப் பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் (49), மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
Next Story






