search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு? வைரலாகும் தகவல்

    கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறும் வீடியோக்கள் முன்னணி வீடியோ ஸ்டிரீமிங் தளமான யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என கூறும் தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

    வீடியோக்கள் மட்டுமின்றி, ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறும் தகவல்கள் அடங்கிய ஸ்கிரன்ஷாட்களும் இணையத்தில் வலம்வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்த இணைய தேடல்களில் வைரலாகும் வீடியோக்கள் மற்றும் ஸ்கிரன்ஷாட்களை நம்ப வேண்டாம் என மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு காணக்கிடைத்தது.

     கோப்புப்படம்

    இத்துடன் இதுபோன்று உண்மையற்ற தகவல்கள் அடங்கிய பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும் பி.ஐ.பி. டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறும் வீடியோக்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
    Next Story
    ×