என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூது கவ்வும் பாணியில் பெட்ரோல் பங்க் ஊழியர் கடத்தல் - எங்கு தெரியுமா?
Byமாலை மலர்22 Oct 2021 9:14 AM GMT (Updated: 22 Oct 2021 9:14 AM GMT)
பெட்ரோல் பங்க் ஊழியர் கடத்தப்படும் சம்பவம் சமீபத்தில் அரங்கேறியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலத்தின் படாவுன் பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியர் கடத்தப்பட்ட போது பதிவான காட்சிகள் என கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் தினந்தோரும் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை ஒட்டி இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
24 நொடிகள் ஓடும் வீடியோவில் பெட்ரோல் பங்க் ஊழியரை ஒருவர் வலுக்கட்டாயமாக காரினுள் தள்ளுகிறார். பின் அந்த கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து செல்லும் பரபர காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த வீடியோவை பலர் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் வீடியோவை இணையத்தில் தேடியபோது, இந்த சம்பவம் 2021, செப்டம்பர் 28 ஆம் தேதி நடந்தது என தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டது ஆகும். வீடியோவின் முழு தொகுப்பு ஆர்.டி. அரேபிக் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வைரல் வீடியோ உத்தர பிரதேச மாநிலத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X