என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரிசர்வ் வங்கியின் புதிய முதலீட்டு திட்டம் - இப்படியொரு சலுகையா?
Byமாலை மலர்7 Sep 2021 5:18 AM GMT (Updated: 7 Sep 2021 5:18 AM GMT)
சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறும் தகவல் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வெளியாகும் போலி செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. போலி செய்திகளுடன், நிதி சலுகைகள் பெயரில் மக்களை ஏமாற்றும் பல்வேறு மோசடி திட்டங்கள் பற்றிய பதிவுகளும் வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன.
ரிசர்வ் வங்கியின் முதலீடு திட்டம் மக்களுக்கு பலமடங்கு லாபம் ஈட்டி தரும் என கூறும் பதிவு வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில், ரிசர்வ் வங்கியின் புதிய முதலீடு திட்டத்தில் ரூ. 12,500 முதலீடு செய்தால், ரூ. 4 கோடி 62 லட்சமாக திரும்ப பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆன்லைன் வங்கி மேலாளர் தொகையை 30 நிமிடங்களில் பரிமாற்றம் செய்வார் என்றும் அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முதலீட்டு திட்டம் பற்றிய வைரலாகும் தகவலை பொது மக்கள் நம்ப வேண்டாம் என மத்திய அரசு நிறுவனமான பி.ஐ.பி. தெரிவித்து உள்ளது.
அந்த வகையில் ரிசர்வ் வங்கி முதலீட்டு திட்டம் என வைரலாகும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X