search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரத்தன் டாடா
    X
    ரத்தன் டாடா

    மது வாங்கினால் ரேஷன் சலுகைகள் ரத்து - ரத்தன் டாடா கூறியதாக வைரலாகும் கருத்து

    இந்தியாவில் மது விற்பனையை இப்படி செய்யலாம் என ரத்தன் டாடா கூறியதாக வைரலாகும் கருத்து பற்றி தொடர்ந்து பார்ப்போம்.



    இந்தியாவில் மது விற்பனை செய்யும் போது ஆதார் அட்டையை காண்பிக்க வேண்டும் என கூறும் தகவல் அடங்கிய பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த கருத்தை ரத்தன் டாடா தெரிவித்தாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    "மது விற்பனையை ஆதார் மூலம் விற்பனை செய்ய வேண்டும் மது வாங்குபவர்களுக்கு அரசு தரும் உணவுக்கான மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும். மது வாங்க வசதி உள்ளவர்களால் உணவும் வாங்க முடியும். நாம் அவர்களுக்கு இலவசமாக உணவைக் கொடுத்தால் அவர்கள் பணத்தைக் கொடுத்து மது வாங்குகிறார்கள்" எனும் கருத்தை ரத்தன் டாடா கூறியதாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    இதுகுறித்த இணைய தேடல்களில், ரத்தன் டாடாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் எந்த தகவலும் இடம்பெறவில்லை என தெரியவந்தது. மேலும் டாடா நிறுவனம் சார்பிலும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இது குறித்த கருத்தை ரத்தன் டாடா கூறியிருப்பின், அதுபற்றிய செய்திகளும் வெளியாகி இருக்கும். 

    எனினும், இவ்வாறு எந்த செய்தி தொகுப்பும் இணையத்தில் கிடைக்கப் பெறவில்லை. அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள கருத்தை ரத்தன் டாடா தெரிவிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

    Next Story
    ×