என் மலர்
செய்திகள்

நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூ. வேட்பாளர் செல்வராசு அதிமுக வேட்பாளரை முந்தினார்
நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசு, அதிமுக வேட்பாளரை விட 91 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
நாகப்பட்டினம்:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் 8 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசு, 2,23,567 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் சரவணன் 1,32,069 வாக்குகள் பெற்றிருந்தார்.
அமமுக வேட்பாளர் செங்கொடி 30 ஆயிரத்து 197 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாலதி 20 ஆயிரத்து 651 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குருவய்யா 5 ஆயிரத்து 79 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் 8 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசு, 2,23,567 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் சரவணன் 1,32,069 வாக்குகள் பெற்றிருந்தார்.
அமமுக வேட்பாளர் செங்கொடி 30 ஆயிரத்து 197 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாலதி 20 ஆயிரத்து 651 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குருவய்யா 5 ஆயிரத்து 79 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
Next Story






