search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் பறிமுதல்
    X

    பல்லடம் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் பறிமுதல்

    பல்லடம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #Loksabhaelections2019

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள 63 வேலாம்பாளையம் காளியம்மன் கோவில் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 1 லட்சத்து 95 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பணத்தை கொண்டு வந்தவர் உடுமலை அருகே உள்ள கொள்ளுபாளையத்தை சேர்ந்த முத்துசாமி (வயது 35) என்பதும், சொந்தமாக போர்வெல் லாரி வைத்து தொழில் செய்ததும் தெரிய வந்தது.

    அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் ஒப்படைத்தனர். அவர் பணத்தை கருவூலத்தில் சேர்த்தார். முத்துசாமியிடம் பணத்துக்கான உரிய ஆவணங்களை சமர்பித்து விட்டு பணத்தை பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.  #Loksabhaelections2019

    Next Story
    ×