என் மலர்
செய்திகள்

சேலத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனை - 340 சேலைகள் பறிமுதல்
சேலம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 340 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LoksabhaElections2019
சேலம்:
சேலம் இரும்பாலை பகுதியில் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் நேற்றிரவு வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ. 1 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான 340 சேலைகள் இருந்தது.
வாகனத்தில் இருந்த வியாபாரி பழனிவேலிடம் விசாரித்த போது அந்த சேலைகள் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து சரியான ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LoksabhaElections2019
Next Story






