என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூழ்ச்சி தெரிந்த விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார்- அமைச்சர் உதயகுமார் பேட்டி
    X

    சூழ்ச்சி தெரிந்த விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார்- அமைச்சர் உதயகுமார் பேட்டி

    கூட்டணி விவகாரத்தில் விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். #ministerudayakumar #vijayakanth #parliamentelection

    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அலுவலக புதிய கட்டிட பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி ஜீரோ. ஜீரோவுடன் எத்தனை ஜீரோ சேர்ந்தாலும் ஜீரோதான். அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி ராஜ்ய கூட்டணி. தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி தண்ணீரும், எண்ணையும் போன்று ஒட்டவே ஒட்டாது.

    விஜயகாந்த் மதுரைக் காரர், சூழ்ச்சி தெரிந்தவர். நல்ல முடிவைத்தான் எடுப்பார். டி.டி.வி. தினகரன் வேட்பாளர் இல்லாமல் தேடிக்கொண்டிருக்கிறார்.

    சூழ்ச்சியோடு விசாரித்தவர்கள் யார்? உண்மையாக விசாரித்தவர்கள் யார்? என்பது மதுரையைச் சேர்ந்த விஜயகாந்துக்கு தெரியும்.


    உண்மையோடு விசாரித்தவர்களோடு விஜயகாந்த் வந்து இணைவார். மெகா கூட்டணி நாங்கள் அமைத்துள்ளோம். நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. டி.டி.வி. தினகரன் போன்றோர் களத்தில், அதாவது தேர்தல் களத்தில் உள்ளனரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. வேட்பாளர்களை அ.ம.மு.க. தேடி வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #ministerudayakumar #vijayakanth #parliamentelection

    Next Story
    ×