search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூரில் காதல் திருமணம் செய்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
    X

    வாசுதேவநல்லூரில் காதல் திருமணம் செய்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    • வாசுதேவநல்லூர் அருகே உள்ள கூடலூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கார்த்திக்(வயது 21).
    • இவர் கடந்த 13-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    நெல்லை:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள கூடலூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கார்த்திக்(வயது 21).

    தற்கொலை

    இவர் கடந்த 13-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு வாசுதேவநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காதல் திருமணம்

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாரித்தனர். அதில், கார்த்திக் கோவையில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே மில்லில் வேலை பார்த்து வந்த தமிழ்செல்வி(20) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி சமீபத்தில் சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் கூடலூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் கார்த்திக் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

    விசாரணை

    கடந்த சில நாட்களாக அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்செல்வி அவரை கண்டித்துள்ளார். அதில் கார்த்திக் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

    இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


    Next Story
    ×