search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி அருகே பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் - சிறுவன் கைது
    X

    தென்காசி அருகே பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் - சிறுவன் கைது

    • சங்கரலட்சுமி மேலப்புலியூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • அமீர் ஜான், தென்காசி மேல பாறையடியை சேர்ந்த சிறுவனும் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

    தென்காசி:

    நெல்லையை அடுத்த ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சங்கரலட்சுமி(வயது 49). இவர் கடந்த 7-ந்தேதி தென்காசி அருகே மேலப்புலியூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் மேலப்புலியூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சங்கர லட்சுமியின் கை பையில் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் தென்காசி போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீசார் திருட்டு சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் தென்காசி மவுண்ட் ரோட்டை சேர்ந்த முகமது அமீர் ஜான் (வயது 19) மற்றும் தென்காசி மேல பாறையடியை சேர்ந்த சிறுவன் ஒருவனும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவ ர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×