என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
    X

    வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு

    • வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபார் உயிரிழந்தார்.
    • போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள ஆழ்வார்ஐயர் தெருவை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 26). இவர் சொந்த வேலை காரணமாக தருமபுரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சம்பவத்தன்று கிருஷ்ணகிரியில் உள்ள சேலம்-ஓசூர் நெடுஞ்சாலையில் ராயக்கோட்டை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் முன்னால் சென்று கொண்டிருந்த பால்வேன் ஒன்று திடீரென்று பிரேக் போட்டு நின்றது. அப்போது ஹரிபிரசாத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பால் வேனின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைபற்றி பிரேத சோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×