என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி மோதி வாலிபர் பலி
- எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம், கொடுமாம்பள்ளி பகுதியை சேர்ந்த சுபாஷ் மற்றும் திருக்குமரன் இருவரும் கடலூர் சென்று விட்டு வீடு திரும்புவதற்காக சிங்காரப்பேட்டை வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள சிங்காரப்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் வரும் போது இரவு நேரத்தில் மழை பெய்ததால் எதிரே வரும் வாகனம் சரியாக தெரியாத சூழ்நிலை ஏறபட்டது.
இதனால் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுபாஷ் (வயது 20) என்ற நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உடன் வந்த திருக்குமரன் என்ற நபர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






