என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்மோட்டாரை திருடிய வாலிபர் கைது
- மத்தூரை அடுத்த கவுண்டனூரில் மின்மோட்டாரை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- ரைஸ்மில்லில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மின்மோட்டார் திருடும்போது வாலிபர் கையும்களவுமாக பிடிப்பட்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூைர அடுத்த கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரவேல் (வயது21). இவர் பழத்துகொட்டாய் பகுதியில் உள்ள வேடியப்பன் என்பவருக்கு சொந்தமான ரைஸ்மில்லில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மின்மோட்டார் ஒன்றை திருடியுள்ளார். அப்போது அங்கு வந்த வேலையாட்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். உடனே அவரை மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரவேலை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story






