என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாடு திருடிய வாலிபர் கைது
- தனது மாட்டை தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார்.
- அந்த மாட்டை சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார் .
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் மேடுகாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (வயது23). விவசாயியான இவர் கால்நடைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் தனது மாட்டை தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார்.
அந்த மாட்டை சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார் . இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த மர்ம நபரை பிடித்து கந்திகுப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது அந்த மர்ம நபர் கீழ்பூங்குறுத்தி கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் (24) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story






