என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்களை கடத்திய வாலிபர் கைது
- 5½ கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
- அவரிடம் இருந்து ஸ்கூட்டரையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரி போலீசார் டி.வி.எஸ். சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு ஸ்கூட்டரை வழிமறித்து சோதனை செய்ததில், ஓசூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த பாரத் (வயது 28) என்பவர் ரூ.6,500 மதிப்புள்ள 5½ கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ஸ்கூட்டரையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story






