என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபாக்கெட்டுகள் கடத்திய வாலிபர் கைது
    X

    மதுபாக்கெட்டுகள் கடத்திய வாலிபர் கைது

    • கே.ஜி.எப். சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • மது பாட்டில்களும் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரிஜா ராணி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி குமார் மற்றும் போலீசார் நேரலகிரி சோதனை சாவடியில் கே.ஜி.எப். சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கர்நாடகாவில் இருந்து ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். போலீசார் அந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    இதில் அந்த பைக்குள் கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் மொத்தம் 333 இருந்தது தெரிய வந்தது- மேலும் மேலும் 2 மது பாட்டில்களும் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் தேவா (வயது 28) என்றும், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சிக்காரிமேட்டையைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாக்கெட்டுகள், மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சிக்காரிமேட்டைச் சேர்ந்த சுந்தர்மணி (26) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×