search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் கஞ்சா விற்ற இளைஞர் கைது
    X

    கோத்தகிரியில் கஞ்சா விற்ற இளைஞர் கைது

    • காப்லின்ஸ் பேருந்து நிறுத்த பகுதியில் கஞ்சா விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது

    ஊட்டி,

    கோத்தகிரி பாண்டியன்பார்க் காப்லின்ஸ் பேருந்து நிறுத்த பகுதியில் கஞ்சா விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது காப்லின்ஸ் பேருந்து நிறுத்தத்தின் அருகில் இருந்த தேயிலை தோட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தார். பின்பு போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது அந்த இளைஞர் ஒரசோலை காமராஜர் பகுதியை சேர்ந்த சுஜித் வயது 23 என்பதும் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது உடனடியாக போலீசார் அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×