என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பூந்தமல்லி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது
BySuresh K Jangir5 July 2022 9:20 AM GMT (Updated: 5 July 2022 9:20 AM GMT)
- பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா செடி வளர்ந்து இருப்பது தெரியவந்தது.
- வினோத் வேறு எங்காவது கஞ்சா செடி வளர்த்து உள்ளாரா? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கோவிந்தராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 34), இவரது வீட்டின் அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா செடி வளர்ந்து இருப்பது தெரியவந்தது. முட்புதரில் வளர்ந்து இருந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்து வினோத்தை கைது செய்தனர்.
அவர் போதைக்காக கஞ்சா செடியை வீட்டிலேயே வளர்த்து வந்தது தெரிய வந்தது. இவர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத் வேறு எங்காவது கஞ்சா செடி வளர்த்து உள்ளாரா? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X