என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போலீஸ்காரை தாக்கிய வாலிபர் கைது
Byமாலை மலர்18 March 2023 9:15 AM GMT
- போலீசார் விக்னேஷ் என்பவரை கைது செய்தனர்.
- அண்ணாமலை தலைமறைவாகியுள்ள நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்த். இவர் அப்பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தார்.
அப்போது இவருக்கு தீர்த்தமலை அரசு மதுபான கடையில் 10 மது பாட்டில்கள் இலவசமாக தருமாறு தகராறு செய்வதாக போன் கால் வந்தது.
உடனே சம்பவ இடத்திற்கு சென்ற ஆனந்த் தகறாறு செய்த அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (26), பூபேஷ் என்கிற அண்ணாமலை (28) ஆகிய இருவரையும் விசாரித்தார்.
இதில் ஏற்பட்ட தகராறில் ஆனந்த் கன்னத்தில் அடித்தனர். இதில் காயமடைந்த ஆனந்த் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் விக்னேஷ் என்பவரை கைது செய்தனர். அண்ணாமலை தலைமறைவாகியுள்ள நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X