search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே வீட்டு மனை தகராறில் கணவன், மனைவியை தாக்கிய இளைஞர் கைது
    X

    தியாகதுருகம் அருகே வீட்டு மனை தகராறில் கணவன், மனைவியை தாக்கிய இளைஞர் கைது

    • ஏழுமலை மனைவி பாஞ்சாலை என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையபெருமாள் (வயது 45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மனைவி பாஞ்சாலை என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இளையபெருமாளின் மனைவி மணிமேகலை, சம்பவத்தன்று பாஞ்சாலை யிடம் வீட்டுமனை சம்பந்தமாக பேசியுள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது பாஞ்சாலை அவரது மகன்கள் முருகன், அன்பழகன், சிவா ஆகியோர் சேர்ந்து மணிமேகலை மற்றும் அவரது கணவர் இளையபெருமாளை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் காயமடைந்த மணிமேகலை, இளைய பெருமாள் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து மணிமேகலை கொடுத்த புகாரின் அடிப்படையில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பழகன் (25) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×