search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்களை விற்ற வாலிபர் கைது
    X

    புகையிலை பொருட்களை விற்ற வாலிபர் கைது

    • புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • 172 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த நவநீதகிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 38) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.71,832 மதிப்பிலான 172 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×