என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிதம்பரத்தில் போலீஸ் நிலையத்தில் சயனைடு-பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்கள்
- சுரேஷ் திடீரென மறைத்து வைத்திருந்த சயனைடை சாப்பிட்டார்.
- வெற்றிச்செல்வன் அங்குள்ள கழிவறைக்கு சென்று பினாயிலை குடித்தார்.
சிதம்பரம்:
சிதம்பரம் 1-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன், சிதம்பரத்தை சேர்ந்த சுரேஷ், புவனகிரியை சேர்ந்த அன்பு ஆகியோரை சிதம்பரம் டவுன் போலீசார் குற்ற வழக்கு தொடர்பாக சிதம்பரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். நேற்று இரவு அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சுரேஷ் திடீரென மறைத்து வைத்திருந்த சயனைடை சாப்பிட்டார். உஷாரான போலீசார் அதை தட்டிவிட்டனர். அதே நேரத்தில் வெற்றிச்செல்வன் அங்குள்ள கழிவறைக்கு சென்று பினாயிலை குடித்தார்.
சிறிது நேரத்தில் 2 பேருக்கும் லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்