search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யலூர் அருகே குழந்தையுடன் பெண்ணை கடத்திச்சென்ற வாலிபருக்கு வலை
    X

    கோப்பு படம்

    அய்யலூர் அருகே குழந்தையுடன் பெண்ணை கடத்திச்சென்ற வாலிபருக்கு வலை

    • குழந்தையுடன் பெண்ணை கடத்திச்சென்ற வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அடுத்துள்ள வேந்தனூரை சேர்ந்த சக்திவேல்(29). இவருக்கு மஞ்சுளாதேவி(28) என்ற மனைவியும், தேவிஸ்ரீ(4) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் மகளை காணவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சக்திவேல் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள முளையூரை சேர்ந்த ஆனந்த்(25) என்பவருடன் தனது மனைவி பழகி வந்ததாகவும், அவர்தான் மனைவி மற்றும் மகளை கடத்திச்சென்றிருக்ககூடும் என குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×