search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் விநாயகர் சிலை கரைக்க சென்றவர் டிராக்டரில் சிக்கி பலி
    X

    பொன்னேரியில் விநாயகர் சிலை கரைக்க சென்றவர் டிராக்டரில் சிக்கி பலி

    • பழவேற்காடு கடலில் விநாயகர் சிலையை கடலில் கரைத்து விட்டு வீடு திரும்பினார்.
    • விநாயகர் சிலையை கரைத்து வீடு திரும்பிய நிலையில் சந்தோஷ் உயிரிழந்ததால் கிராமத்தினர் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (21) விவசாயி. நேற்று மாலை பழவேற்காடு கடலில் விநாயகர் சிலையை கடலில் கரைத்து விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது தவறி விழுந்து டிராக்டர் சக்கரத்தில் சிக்கினார். இதில் சந்தோஷ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாலை வனம் போலீசார் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விநாயகர் சிலையை கரைத்து வீடு திரும்பிய நிலையில் சந்தோஷ் உயிரிழந்ததால் அப்பகுதியில் கிராமத்தினர் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

    Next Story
    ×