search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

    • வாலிபர் 17 வயதுடையை தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
    • தகவல் அறிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வீரசின்னம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜா (வயது 35). இவர் கடந்த வருடம் 17 வயதுடையை தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    தற்போது அவர் கர்ப்பிணியான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது வயதை சரிபார்த்தபோது மைனர் பெண்ணுக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன்ஜெயக்குமார், மகளிர் ஆய்வாளர் திலகா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×